கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக எங்கெங்கும் வியாபித்திருந்து, அருள்மழை பொழிந்து வருகின்றார். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய தோற்றம்தான் புதிராக இருந்தது என்றால், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட பல நேரங்களில் புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர்தாம் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு மற்றவர்களுக்கு உணர்த்தவே செய்தார். ஆனால், மற்றவர்கள் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்த 100-வது ஆண்டு இன்று விஜயதசமியன்று தொடங்குகிறது. Saibaba Saibaba Saibaba தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் நடத்திய சில அருளாடல்களை இங்கே பார்ப்போம். Saibaba ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது...