கந்தர் சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங்கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. நூல் அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. சஷ்டியைநோக்கச்சரவணபவனார் சிஷ்டருக்குதவுஞ்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில்பன்மணிச் சதங்கை கீதம் பாடக்கிண்கிணியாட மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார் கையில் வேலாலெனைக்காக்கவென்று உவந்து வரவரவேலாயுதனார்வருக ! வருக ! வருக! மயிலோன்வருக! இந்திரன்முதலாவெண்டிசைபோற்ற மந்திரவடிவேல்வருக! வருக! வாசவன்மருகா! வருக! வருக! நேசக்குறமகள்நினைவோன்! வருக! ஆறுமுகம் படைத்த ஐயா! வருக! நீறிடும்வேலவன் நித்தம் வருக! சிரகிரிவேலவன் சீக்கிரம் வருக! சரஹணபவனார் சடுதியில் வருக! ரஹணபவச, ரரரரரரர ரிஹணபவச,ரிரிரிரிரிரிரி விணபவசரஹணவீராநமோ நம! நிபவசரஹணநிறநிறநிறென வசரஹணபவருகவருக! அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக! என்னை யாளும்இளையோன்கையில் பன்னிரண்டாயுதம்பாசாங்குசமும் பரந்த விழிகள்பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ! ஐயும் கிலியும்அ...